Categories: latest newstamilnadu

ஆளும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…அடுத்த மாதம் அன்புமணி ராமதாஸ் காட்டப் போகும் அதிரடி…

அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தருமபுரி – காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் விதமாக அடுத்த மாதமான அக்டோபர் நான்காம் தேதி வெள்ளிக்கிழமையன்று அன்று அரை நாள் மட்டும் தருமபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரத்து இருனூரு அடிக்கும் கீழாக சென்றுவிட்டது என்றும், வேளாண்மைக்கு புத்துயிர் ஊட்டுவது சாத்தியமற்றதாகிவிட்டது என்றும் தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

Dharmapuri

எனவே தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாக தொடர்வதை அனுமதிக்க முடியாது எனவும், தருமபுரி – காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த அரசை வலியுறுத்தும் விதமாக இந்த அற வழிப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட உழவர்கள் மற்றும் அனைத்து தரப்பிலிருந்து தனக்கு வந்த வேண்டுகோளை ஏற்றும், தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காகவும் அடுத்த மாதம் நான்காம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த அற வழி, அரை நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் உட்பட அனைவரும் தங்களின் முழு ஆதரவினை கொடுத்து, தருமபுரி – காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கோருவதாக அன்புமணி ராமதாஸ்வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

sankar sundar

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

8 seconds ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

8 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

29 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago