நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசிய உரையாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேள்வி கேட்டிருந்த தனியார் உணவகத்தின் உரிமையாளர் நிதி அமைச்சரை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் முன் வைத்திருக்கின்றனர்.
கோவை ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆணவத்தின் உச்சம் என்றும், இது கண்டனத்திற்குரியது எனவும் ஆட்சியாளரகளிடம் கேள்வி கேட்டால் அவமதிப்புடனும், மரியாதைக்குறைவகவும் நடத்துகிறார்கள் என்றும் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதே போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது பற்றி பேசுகையில் ஹோட்டல் உரிமையாளர் கேட்ட கேள்விகள் எல்லாம் உண்மையானது என்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து அவர் கேட்ட கேள்விகள் நாடு முழுவதும் பரவி விட்டது, இனி இதை யார் நினைத்தாலும் மறைக்க முடியாது என தனது கண்டனக்குரலை எழுப்பியுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்த வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியிருக்கிறார்.
பாஜகவினர் சிலரின் செயலுக்காக தான் மன்னிப்பு கோருவதாகவும், ஹோட்டல் உரிமையாளர் தமிழக வணிகத்தின் தூனாக விளங்குகிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிட்ட பங்களிப்பை நல்குகிறார். அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி தனது வருத்தத்தினையும் , மன்னிப்பையும் கோரியுள்ளதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…