Connect with us

latest news

தமிழ்நாட்டுல பல பேய் இருக்கு, அத ஓட்டத்தான் இந்த வேதாளம் வந்திருக்கிறேன்… ஜெயக்குமாரை விமர்சித்த அண்ணாமலை…

Published

on

தமிழகத்தில் பல பேய்கள் இருக்கின்றன. அந்த பேய்களை ஓட்ட தான் இந்த வேதாளம் நான் வந்திருக்கின்றேன் என்று அண்ணாமலை கூறி இருக்கின்றார்.

சமீப நாட்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கடுமையான வார்த்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தை போல் நிலவி வருகிறது இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கூறி வருகிறார்கள். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக மாறுகின்றது.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது தங்களை விட்டுவிட்டு செல்லப் பெருந்தகை மீது ஏறி இருக்கின்றது. மேலும் லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கின்றேன் என் அண்ணாமலை கூறி இருக்கிறார்.

லுங்கி அணிந்து கொண்டு பேட்டி கொடுப்பது ஒன்றும் அவ்வளவு நாகரீகம் அற்ற செயல் அல்ல என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயக்குமாருக்கு பதில் அளிக்கும் விதமாக பேசி இருக்கின்றார். அவர் தெரிவித்திருந்ததாவது தமிழகத்தில் இன்று பீடைகள் போல் பல பேய்கள் இருக்கின்றன. அந்த பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான். எல்லா பேர்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஓட்ட வேண்டியதுதான் வேலை என்று அவர் பதில் அளித்து இருக்கின்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version