Categories: latest newstamilnadu

வினாத்தாள் லீக் ஆனது எண்ணமோ உண்மைதான்… ஆனால் நிறைய பேருக்கு அது கிடைக்கல – அண்ணாமலை…

நீட் வினாத்தாள் லீக் ஆனது என்னமோ உண்மைதான் ஆனால் அது நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என்று அண்ணாமலை பேசி இருக்கின்றார்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போனஸ் மதிப்பெண் என்று பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குஜராத், ஜார்கண்ட், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்து இருக்கிறார்கள்,

நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த எட்டாம் தேதி நடந்த விசாரணையில் நீட் தேர்வின் புனித தன்மை மீறப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

அதற்கு பதில் அளித்த அவர் தெரிவித்திருந்ததாவது “நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. அதில் நீட் வினாத்தாள் கசிவடைந்தது உண்மைதான். ஆனால் அந்த வினாத்தாள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. பலருக்கும் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறவில்லை என்று தான் தெரிவித்திருக்கின்றது. எனவே வினாத்தாள் கசிவு மிகச் சிறிய அளவில்தான் நடந்துள்ளது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Ramya Sri

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago