Categories: latest newstamilnadu

தமிழ்நாட்டுல இப்பல்லாம் கொலை, கொள்ளை எல்லாம் சாதாரணமாயிருச்சு.. அண்ணாமலை ஆவேசம்..!

தமிழகத்தில் இப்போதெல்லாம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார்.

பகுஜன் சமாஜோத் கட்சியின் மாநில தலைவர் பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த வழக்கில் எட்டு பேர் நாங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்து இருக்கின்றார்கள்.

சரணடைந்த 8 பேரையும் கைது செய்த காவல்துறையினர் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், தென்னை, பனை மரங்களில் இருந்து கல் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்ததாவது “சுவையான மாம்பழங்கள் இருக்கும் மரத்தில் கல்லடி என்பது படத்தான் செய்யும் தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

நேற்று தேசிய கட்சியின் மாநில தலைவரை அவரது வீட்டின் வாசலில் வைத்து கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடிக் கொண்டிருக்கின்றது. கள்ளச்சாராயம் சாப்பிட்டு பலர் மரணம் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் சாதாரண மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் என்பது இல்லாத சூழ்நிலைதான் தற்போது உருவாகி இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.

Ramya Sri

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

22 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

58 mins ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago