Categories: latest newstamilnadu

பெரம்பூரில் வைக்கப்பட்டிருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங் உடல்… பொதுமக்கள் இறுதி அஞ்சலி…!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தன் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் மாலை எட்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்திருந்தார்கள்.

அவருடன் இருந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டி ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர் உயிரிழந்த பிறகு ராஜாஜி மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று முழுவதும் அவரது உடல் அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம் நடைபெற உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று பேர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்கள். இது தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. முதலில் கைதான எட்டு பேர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதம் இருக்கும் மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரம்பூரில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ramya Sri

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago