Categories: latest newstamilnadu

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் செல்போன் மீட்பு… அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளின் செல்போனை ஹேண்டில் செய்த அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் கைது படலம் தொடர்ந்து வருகிறது.

கொலை செய்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் பாலு, பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருந்த ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் நண்பர்தான் இந்த ஹரிதரன் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட 8 பேரின் செல்போன்கள் ஹரிதரன் வசம் இருந்ததையும் கண்டுபிடித்த போலீஸார், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட அந்த செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்த செல்போன்களை வழக்கறிஞர் அருள் அறிவுறுத்தலின்படி, ஹரிசுதன் கொசஸ்தலை ஆற்றில் வீசியதும் தெரியவந்திருக்கிறது.

AKHILAN

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

4 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

4 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

5 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

13 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

13 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

14 hours ago