இந்தியா – வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியின் துவக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகள் மலமலவென சரியத் துவங்கியது. தக்க நேரத்தில் பொறுப்புடன் விளையாடி சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை. இதில் இந்திய வீரர் அஷ்வின் சதமடித்து அசத்தினார்.
பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்த வந்த வங்கதேச அணி, இந்திய அணியுடனான டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி பங்களாதேக்கு எதிரான போட்டிகளில் அசத்தல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்த இரு அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது.
துவக்கத்தில் வங்கதேசத்தின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நூற்றி நாற்பத்தி நான்கு ரன்கள் எடுப்பதற்குள் ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணிக்கு தனது சொந்த மண்னிலே இப்படி ஒரு நிலைமையா? என கவலையோடு இருந்த இந்திய ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதாமாக ஆல்-ரவுண்டர் அஷ்வின் சதம்டித்தார்.
நூற்றி எட்டு பந்துகளில் நூறு ரன்களை எடுத்தார் அஷ்வின். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அடிக்கும் ஆறாவது சதமிது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆறு சதங்களில் சேப்பாக்கம் மைதானத்தில் அஷ்வின் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட அஷ்வினுக்கு துணையாக களத்தில் நின்று வரும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா என்பத்தி ஆறு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.
முதல் நாள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து முன்னூற்றி முப்பத்தி ஒன்பது ரன்களை எடுத்துள்ளது இந்தியா. பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என நூற்றி இரண்டு ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார் போட்டியின் இன்றைய நாளின் கதாநாயகன் ரவிச்சந்திரன் அஷ்வின்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…