மறைந்த பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் மனைவிக்கு பொறுப்பு கொடுத்து புதிய பொறுப்பாளர்கள் நியமனமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ந் தேதி பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தினையே அதிர செய்தது. இதை தொடர்ந்து காவல்துறை இவ்வழக்கினை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வாகி இருக்கிறார். கட்சியின் மாநில துணை தலைவராக இளமான் சேகர், மாநில பொருளாளராக கமலவேல் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கினை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தனது அரசியல் கொள்கையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை முன்பே அறிந்த ஆம்ஸ்ட்ராங் பல வருடமாக திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். ஆனால் அவரை காதலித்த பொற்கொடி தந்தையின் மூலம் திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார்.
இருவருக்கு பெளத்த மத முறைப்படி திருமணம் நடந்தது. பொற்கொடிக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 20 வயது வித்தியாசம் எனக் கூறப்படுகிறது. இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர். பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…