வங்கதேச மாணவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்ததன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் மற்றும் ராணுவப் படையினர் தாக்குதல் நடத்திய சம்பவமும் பல இடங்களில் நடந்தது.
வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் வங்கதேச உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தீர்ப்பு வர இருக்கும் நிலையில், வங்கதேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
வெளியே குழுவாக கூடினால், கண்டவுடன் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்கதேசம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…