இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகிய இருவருக்கும் இஷான் கிஷனுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இன்று காலை துலீப் கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் துவங்கின. இந்நிலையில், போட்டி துவங்க சற்று நேரங்களே இருந்த போது, இஷான கிஷன் அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புச்சிபாபு தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து அவர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
புச்சி பாபு தொடரில் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளில் இஷான் கிஷன் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
அதன்பிறகு, துலீப் கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் இஷான் கிஷன் விளையாடுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் துலீப் கோப்பை தொடருக்கான எந்த அணியிலும் இடம்பெறவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
மேலும், பலர் இஷான் கிஷன் துலீப் கோப்பை தொடரின் எந்த அணியிலும் இடம்பெறாதது குறித்து எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்தனர். பலர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க எக்ஸ் பதிவுகளில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பிசிசிஐ வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் துலீப் கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் இந்தியா சி அணியின் பிளேயிங் XI-இல் இஷான் கிஷன் பெயர் இடம்பெற்றுள்ளது.
துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகள் முடிந்த பிறகு வங்கதேசம் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துலீப் கோப்பை அணிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
அப்போதும் கூட இஷான் கிஷன் துலீப் கோப்பை தொடரின் எந்த அணியிலும் இடம்பெறவில்லை. தற்போது போட்டி துவங்கும் நிலையில், அவரது பெயர் திடீரென இந்தியா சி அணியில் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தாலும், அணியில் திடீர் மாற்றம் செய்ய என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…