கோவை குஜராத் சமஜாத்தில் நடைபெற்ற தன்னாரவலர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கோயம்பத்தூரில் பாஜக தோல்வியடையவில்லை என்றார். கோவை தொகுதியில் வெற்றி தள்ளிப்போய் உள்ளது எனச் சொன்னார். இந்த தொகுதியில் முப்பத்தி மூனு சதவீத வாக்குகளை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி என்றார்.
இங்குள்ள நூறு பூத்களில் முதல் அல்லது இரண்டாவது இடம் வரை பாஜக வந்துள்ளது, இதே போல தமிழகத்தில் மொத்தமுள்ள அறுபத்தி எட்டாயிரம் பூத்களில் எட்டு ஆயிரம் பூத்களில் பாஜக முதன்மை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார் அண்ணாமலை. கட்சி களப்பணியாளர்களின் செயல்பாடுகள் ஆழமாக வேரூன்ற தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவை நாடாளுமன்ற தேர்தல் ஒரு ஆன்மீக பயணம், பணம் இல்லாமல் பலவகையான சவால்களை சந்தித்து இந்த நிலையை அடைந்துள்ளோம், இதனால் கோவையில் பாஜக தோற்க வில்லை. அதன் வெற்றி தள்ளிப்போய் உள்ளதாக கூறினார்.
தனது அரசியல் பயணம் குறித்து பேசத்துவங்கிய அண்ணாமலை சில நேரம் கால்களை முன்னால் வைக்க வேண்டும், சில நேரங்களில் கால்களை பின்னால் வைக்க வேண்டும், எப்போது முன்னால் வைக்க வேண்டும், எப்போது பின்னால் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும் என்றார். அரசியலில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல, சொந்த கட்சியில் இருப்பவர்களும் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். அதனால் அரசியலில் சகிப்புத்தன்மை, பொறுமை, சமரசம் ஆகிய மூன்றும் மிக முக்கியம் என்றார்.
அரசியலில் இருக்க வேண்டுமா? என்ற எண்ணம் தனக்கு மனதில் தோன்றியது உண்டு. எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியில் இணையாமல் செயல் பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…