மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான இரண்டு பென் காவலர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
குவாலியரை அடுத்த டேகன்பூரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) பயிற்சி மையம் அமைந்திருக்கிறது. இந்தப் பயிற்சி மையத்தில் ஜபல்பூரைச் சேர்ந்த ஆகான்ஷா நிஹார் மற்றும் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஷஹானா காண்டூன் ஆகியோர் காவலர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 6-ம் தேதி பயிற்சி மையத்தில் இருந்து திடீரென மாயமாகியிருக்கிறார்கள்.
அதன்பிறகு பயிற்சி மையத்துக்குத் திரும்பாத அவர்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கியபோதுதான், செல்போன் மூலம் சந்தேகப்படும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அவர்களின் செல்போன் ரெக்கார்டுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்களின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, டெல்லி, ஹவுரா மற்றும் மேற்குவங்கத்தின் பெஹ்ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்றிருந்ததும் தெரியவந்தது. அந்தந்த ஊர்களில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், எல்லையிலும் துணை ராணுவப் படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ஆகான்ஷா மாயமானது குறித்து குவாலியன் போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரின் தாயார் ஊர்மிளா குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஷஹானாவின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து வாய்திறக்க மறுப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…