latest news
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. ஏ.டி.எம்.கள் அறிமுகத்திற்கு பின்னர் வங்கிக்கு செல்ல தேவையில்லாத நிலை உருவாகியது. இணையதள பணப்பரிமாற்ற சேவை அறிமுகங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது மிகவும் எளிதான ஒன்றாகவே மாறிவிட்டது.
மொபைல் ஆப்கள் மூலம் உட்கார்ந்த இடத்திலேயே பணம் அனுப்பும் வசதியும் வந்து விட்டதால் ஏ.டி.எம். களுக்கு செல்வது கூட தவிர்க்கக் கூடிய பயணமாக மாறி விட்டது. இது போன்ற பணப்பரிவந்தனைகள் ஒரு பக்கம் எளிமையான ஒன்றாக தெரிந்தாலும், இதன் மூலம் நடக்கும் ஏமாற்று வேளைகளால் பலர் பாதிப்படைந்த செய்திகளும் காதுகளை வந்தடைந்து கொண்டு தான் இருக்கிறது.
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்ற போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தனது முகம் தெளிவாகத் தெரியும் விதமாக போஸ் கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஓப்பந்தகாரரின் பர்ஸை திருடிச் சென்றதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த ஏ.டி.எம். அட்டையின் மூலம் பத்தாயிரம் ரூபாயை எடுத்த முத்துக்கிருஷ்ணன் என்ற கட்டுமானத் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தனக்கு இருந்த மறதியின் காரணமாக ஏ.டி.எம்.பாஸ்வேர்டை துண்டுச் சீட்டில் எழுதி பர்ஸில் வைத்திருக்கிறார் கட்டிட ஒப்பந்தக்காரர். அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த போது அருகே நின்று இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன அவரது பர்ஸை திருடியதோடு மட்டுமல்லாமல் ஏ.டி,எம்.அட்டையின் மூலம் பத்தாயிரம் ரூபாயையும் திருடி இருக்கிறார்.
பணம் எடுக்கும் போது அங்கிருந்த கேமராவை உற்றுப் பார்த்ததன் விளைவாக முத்துக்கிருஷ்ணன் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார். அவர் திருடிய பர்ஸிற்குள்ளே ஏற்கனவே ஐந்தாயிரம் ரூபாய் பணமும் இருந்துள்ளது.
latest news
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். பாஜவின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா நெல்லை, மாவட்டத்தில் கட்சி சார்ந்த சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் எச்.ராஜா, அப்போது தமிழகத்தில் பத்து லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது, இது வரவேற்கத்தக்கது என்றார்.
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது, அதில் திமுக – விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு, மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மது விலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது என சொல்லியிருந்தார்.
மத்திய அரசு மது விலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்லுவது போலி நாடகம் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிறைவேற்றியது என்றும் சொன்னார்.
மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தற்போது செயல் இழந்து கிடக்கிறது, 2026ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும் என பாஜகவின் எச்.ராஜா திருநெல்வேலியில் நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் சொல்லிருந்தார்.
latest news
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாலை நாலு மணிக்கு கோலாகலாமாக துவங்க உள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி இந்த போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கன மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வருகிற இருபத்தி நான்காம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. முப்பத்தி ஆறு வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளது.
இந்தாண்டு தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகையை ரூபாய் முப்பத்தி ஏழு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான துவக்க விழா இன்று மாலை நாலு மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் துவக்க விழாவில் ஜோதியை ஏந்திச் செல்ல உள்ளனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கும் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் என ஐந்து வகை பிரிவாக நடத்தப்பட்ட போட்டிகளில் பதினொன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்.
மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்திருந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள முப்பத்தி மூவாயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.
latest news
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த இருபத்தி நான் கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
latest news
பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பவன் கல்யாண் எதிர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இரு மாநில துணை முதல்வர்களிடையே கருத்து மோதல் துவங்கியுள்ளது.
சனாதானம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசியிருந்தார். அப்போது சனாதனம் என்பது வைரஸ் போன்றது என சொல்லியிருந்தார். இதற்கு ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது கருத்தினை சொல்லியிருந்தார்.
சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களைப் போலவே நிறைய பேர் வந்து போய் விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழக துணை முதல்வர் உதயநிதி. பவன் கல்யாண் கருத்து குறித்து பொறுதிருந்து பார்க்கலாம் ‘LET’S WAIT AND SEE’ என தனது காரில் அமர்ந்து சிரித்தபடியே பதிலளித்துள்ளார்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நேரத்தில் திரைப்பட நடிகர் கார்த்தி பட விழா ஒன்றில் பேசியிருந்ததற்கு கார்த்தியை கடுமையாக கண்டித்து தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தார் பவன் கல்யாண்.
தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்கு தான் மன்னிப்பு கோருவதாக கார்த்தி பதிலளித்திருந்தார். இந்நிலையில் சனாதனம் குறித்து துணை முதல்வர்கள் இருவரும் பேசியுள்ள காரணத்தினால அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Finance
உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…
தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.
தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.
நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி என்பதாகவும் (ரூ.56,880/-) இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.
-
Cricket1 day ago
டோனி ஸ்கிரீனை குத்தினார்.. படியில் இருந்து அதை பார்த்தேன்.. ஹர்பஜன் சிங்
-
Cricket1 day ago
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC
-
Cricket11 hours ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
-
Cricket1 day ago
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
-
latest news1 day ago
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…
-
latest news1 day ago
நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…
-
latest news3 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…