கேமலின் நிறுவனத்தின் ஓனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்.
கேம்ப்ளிங் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் தண்டேகர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மும்பையில் ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவரின் இறுதி சடங்குகள் தாதரியில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் அவரின் குடும்பத்தினர் மற்றும் கேமலின் நிறுவன ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
1946 ஆம் ஆண்டு தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு பிறகு 1998 இல் பங்கு சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. கேம்ப்ளின் நிறுவனம் 93 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஸ்டேஷனரி தயாரிப்பில் இந்த நிறுவனம்தான் முன்னணி வகுக்கின்றது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் 51% பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ நிறுவனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…