தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சேலம் ஸ்டார்ட்டான்ஸ் அணி எதிர்கொண்டது. சேலம் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வித்தியாசமாக ரவிச்சந்திரன் அஸ்வின் துவக்க ஆட்டக்காரராக சிவம் சிங்குடன் களமிறங்கினார். ஆனால் அவரின் கணிப்பு தவறிவிட அஸ்வின் 6 ரன்களிலும், சிவம் 2 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மிடில் ஆர்டரில் விளையாடிய பாபா இந்திரஜித் மற்றும் விமல் குமார் முறையே 51 மற்றும் 47 ரன்கள் எடுத்தனர். இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக சேலம் அணியை சேர்ந்த ஹரிஷ் குமார் மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்களை எடுத்தனர். இதை தொடர்ந்து சேலம் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
அபிஷேக் மற்றும் கவின் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தலா 28 மற்றும் 46 ரன்களை எடுத்திருந்தனர். மேலும், ஆர் விவேக் 51 ரன்கள் எடுத்து சேலம் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். திண்டுக்கல் அணியில் அஸ்வின் மற்றும் வருண் சக்கிரவர்த்தி இருந்தும் அந்த அணி தோல்வியை தழுவியது. அஸ்வினின் முடிவு திண்டுக்கல் அணிக்கு பாதகமாக அமைந்தது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…