எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் போலி பாத்திரங்களை தயார் செய்து அதனை பதிவு செய்து கொண்டது மட்டுமில்லாமல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து பிரகாஷ் கரூர் காவல் நிலையத்தில் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக எம் எஸ் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து எம் எஸ் விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் வீடு நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.
9 ஆய்வாளர்கள் இரண்டு டிஎஸ்பிக்கள் கொண்ட குழு தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றது. நில அபகரிப்பு வழக்கில் எம்ஆர் விஜயபாஸ்கர் தேடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவது அதிமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் எவ்வாறு விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி இடமும் சிவிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…