திரைத்துறையில் நடிகர்கள், நடிகைளிடையே படங்களில் நடிக்கும் போதே காதல் மலர்ந்து, பின்னர் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தமிழ் சினிமா ரசிகர்கள் பாத்து வரும் ஒன்றாகி விட்டது. காதலித்து திருமணம் முடித்து இன்று வரை தங்களது இல்வாழ்க்கையை மகிழ்வோடு வாழ்ந்து வரும் தம்பதியர் பலரையும் கண்டு வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.
அதே நேரத்தில் கருத்து வேறுபாடு, மனம் ஒத்துப்போகாமல் பிரிவை அறிவித்த பிரபலங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ராமராஜன் – நளினி, தனுஷ் – ஐஸ்வரயா, ஜீ.வி.பிரகாஷ் – சைந்தவி என பிரிவை சந்தித்துள்ள திரை பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது மற்றுமொரு ஜோடி.
“ஜெயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரவி. அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதன் பிறகு அவர் “ஜெயம்” ரவி என்றே இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்.
ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து தனது கணவர் “ஜெயம்” ரவியின் படங்களை நீக்கவே இருவரும் பிரியபோகிறார்கள் என்ற செய்தி பரவத்துவங்கியது.
இந்த சூழலில் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக “ஜெயம்”ரவி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்கு பிறகே ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சாரந்தவர்களின் நலன்களை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது என சொல்லியிருக்கிறார்.
என்னனுடைய முன்னுரிமை எப்போதும் என் நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் “ஜெயம்”ரவியாகவே இருக்க விரும்புகிறேன்.
நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு என தனது அறிக்கையின் வாயிலாக தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் “ஜெயம்” ரவி.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…