இனி கோவிந்தா போட்டே ஆகனுமாம்!…திருப்பதிக்கே வந்த திருப்பம்?…

திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க நாள் தோறும் மக்கள் கூட்டம் அலைமோதியே வருகிறது. இந்தியா முழுவதுமல்ல உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள வழிபாட்டுத்தலமாக திருப்பதி மாறி வருகிறது. உலகம் முழுவதுமிருந்தும் ஸ்ரீனிவாச பெருமானை தரிசிக்க பக்தர்கள குவிந்து வருகின்றனர்.

அதே போலத் தான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி தரிசனத்திற்கான பயணத்தை துவங்ககுகின்றனர் அதிகமான பக்தர்கள். அதிலும் திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வார இறுதி நாட்களில் வரும் பக்த கோடிகளின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக அறுபத்தி ஐந்தாயிரத்து நூற்றி முப்பத்தி நாளு பேர் வந்து திருமலையானை தரிசித்துச் சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

TIRUPATHI

கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் திருக்கோவில் உண்டியலில் நாலுகோடியே இருபத்தி ஏழுலட்ச ரூபாய் (ரூ.4.27/-கோடி) வசூலாகியுள்ளதாகவும், அதே போல ஒரே நாளில் இருபத்தி ஆறாயிரத்து நூறு பேர் (26,100 பேர்) முடிக்காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது கோவில் தேவஸ்தானம். இதன் படி ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது ‘கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாய’ என சொல்லிய பின்னரே பேசத்துவங்க வேண்டும்.

அதே போல கோவிலில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் சனிக்கிழமை பணிக்கு வரும் போது வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தே தான் பணிக்கு வரவேண்டும் என்றுள்ளது. அப்படி வரும் ஊழியர்கள் தங்களது நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து தான் வர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரித் தான் கோவிலில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் புடவை, ஜாக்கெட், சுடிதார் அணிந்து வரலாம். சுடிதார் அணிந்து வருபவர்கள் கட்டாயம் துப்பட்டா அணிந்து தான் வர வேண்டும், நெற்றியில் குங்குமம், திலகம், ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

sankar sundar

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago