Categories: latest newstamilnadu

விஷ சாராய உயிரிழப்பு… ரூ.10 லட்சம்லா ரொம்ப ஜாஸ்தி… ஒரே போடாய் போட்ட சென்னை ஹைகோர்ட்…!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 65க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்கள் அருந்திய சாராயத்தில் அதிக அளவு மெத்தனால் கலந்திருந்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தல பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதமானது. அதனை குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது.

தீவிபத்து, வாகன விபத்து உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி பலியானவருக்கு குறைந்த அளவு இழப்பீடு வழங்கும் நிலையில் விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எப்படி அதிக இழப்பீடு வழங்கப்படுகின்றது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். விஷ சாராய குடித்து உயிர் இழந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களோ, தியாகிகளோ சமூக சேவகர்கலோ அல்ல. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதி மதி முகமது சபிக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு என்பது மிக அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Ramya Sri

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago