முதலைக்கண்ணீர் விடும் முதல்வர்….பழனிசாமி பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை மேயர்…

0
94
Chennai Mayor
Chennai Mayor

தமிழக முதலமைச்சர் சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினார். இது குறித்து தமிழக எதிர் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.

அதில் ஏழை, எளிய மக்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்த முயற்சித்தும், தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் என குற்றம் சாட்டி தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தார் பழனிசாமி.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு சென்னை மேயர் பிரியா தனது கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Stalin Edappaadi
Stalin Edappadi

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாரட்ட எதிர்கட்சித் தலைவருக்கு மனமில்லை என தாக்கி பேசினார். கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சென்னை மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார்.

திமுகவால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி மக்கள் அறிவர்.   பொறாமையிலும், ஆற்றாமையிலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பித்தவிக்கிறார் என்றார். அதே போல மனிதநேயர் முதலமைச்சர் ஸ்டாலினை அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒரு நாளும் இருந்ததில்லை என்றும் மேயர் பிரியா சொல்லியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கண்டனம் குறித்து சென்னை மேயர் பிரியா பதிலளித்து தாக்கி பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here