Categories: latest newstamilnadu

முதலைக்கண்ணீர் விடும் முதல்வர்….பழனிசாமி பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை மேயர்…

தமிழக முதலமைச்சர் சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினார். இது குறித்து தமிழக எதிர் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.

அதில் ஏழை, எளிய மக்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்த முயற்சித்தும், தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் என குற்றம் சாட்டி தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தார் பழனிசாமி.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு சென்னை மேயர் பிரியா தனது கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Stalin Edappadi

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாரட்ட எதிர்கட்சித் தலைவருக்கு மனமில்லை என தாக்கி பேசினார். கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சென்னை மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார்.

திமுகவால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி மக்கள் அறிவர்.   பொறாமையிலும், ஆற்றாமையிலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பித்தவிக்கிறார் என்றார். அதே போல மனிதநேயர் முதலமைச்சர் ஸ்டாலினை அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒரு நாளும் இருந்ததில்லை என்றும் மேயர் பிரியா சொல்லியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கண்டனம் குறித்து சென்னை மேயர் பிரியா பதிலளித்து தாக்கி பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sankar sundar

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago