மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுவனுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் இரண்டு லட்சம் நிதி உதவியும் வழங்கியிருக்கின்றார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“திருவள்ளூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கிராமம் கோட்டகச்சேரி பகுதியில் கோவில் திருவிழாவிற்காக விளம்பரப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அன்று இரவு அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் விளம்பர பதாகைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் விதமாக செயல்பட்டு வந்த நிலையில் அருகில் உள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் காயம் அடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ரூபன் என்பவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூபாய் இரண்டு லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூபாய் 50,000ம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…