முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நானூற்றி எழுபத்தி ஓரு நாட்களுக்கு பிறகு ஜாமீனில் இன்று வெளி வர இருக்கிறார். சட்ட விரோத பணப்பறிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உச்ச நீதி மன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை திமுக தொண்டர்களும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றிருக்கிறார்.
ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தனது வரவேற்பினை பதிவிட்டுள்ளார்.
அதில் கைது செய்து சிறையிலேயே வைக்கப்பட்டதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள், முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையிலிருந்து வெளியே வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்பதாக சொல்லியிருக்கிறார். எமர்ஜென்ஸி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழக்கை கிடையாது, அரசியல் சதிகளால் பதினைந்து மாதங்கள் தொடர்ந்தன. உன் தியாகம் பெரிது அதனினும் உறுதி பெரிது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையானது அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில் அதற்கு உச்ச நீதி மன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது என்றும் தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையிலிருந்து வெளிவர உள்ள நிலையில் கரூரில் கொண்டாட்டங்கள் கலைகட்டி வருகிறது. சிறையிலிருந்து இன்று மாலைக்குள் செந்தில பாலாஜி வெளியே வருவார் என சொல்லப்படுகிறது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…