வாலிபரின் வயிற்றுக்குள் கரப்பான் பூச்சி உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றி இருக்கிறார்கள். டெல்லியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிய நேரத்திலேயே அவருக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.
இதையடுத்து மூன்று நாட்கள் வலியால் அவதிப்பட்டவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் கரப்பான் பூச்சி ஒன்று உயிருடன் நடந்து சென்றது தெரியவந்தது. உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.
இந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது. இளைஞர் சாப்பிடும் போது கரப்பான் பூச்சியை தவறுதலாக விழுங்கி இருக்கலாம் எனவும், தக்க சமயத்தில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த இளைஞரை காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…