கட்டடம் இடிந்து விழுந்த போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேச மாநிலம், மீரட் நகரில் சதார் பஜார் என்கின்ற பகுதி உள்ளது. அந்த பகுதி வழியாக இரண்டு சிறுவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பகுதியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. சதார் பஜாரில் சைன சமூக அறக்கட்டளைக்கு சொந்தமான மிகவும் பழமையான அதாவது 100 முதல் 150 வருட பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.
ஏற்கனவே பாலடைந்தது போல் இருக்கும் அந்தக் கட்டிடம் அப்படியே விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ஒரு ஆறு முதல் ஏழு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டிடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து கொண்டே சென்றிருந்தார்கள். கட்டிடம் அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த சிசிடிவி வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி பாழடைந்து போன கட்டிடத்தை இடிக்காமல் எதற்காக வைத்திருந்தார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…