Categories: latest newstamilnadu

பெற்றோர்களின் எதிர்ப்பு… காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி ஜோடி… அடுத்தடுத்து நேர்ந்த சம்பவம்…!

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி ஜோடிகளுக்கு பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதான வாலிபர் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றார். இவர் சின்ன திருப்பதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சேலத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அரியலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர்.

இந்நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்தார்கள். இதைத்தொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோரும் போலீசாரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் கல்லூரி மாணவி பெற்றோருடன் செல்வதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார்.

இதனால் அவரை அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் இருக்குமாறு தெரிவித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க மாணவியை திருமணம் செய்து கொண்ட மாணவருக்கு பலரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதையடுத்து அந்த தம்பதி மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க கல்லூரி மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வீட்டுக்கு அருகில் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

2 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

2 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

5 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

6 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

7 hours ago