தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்கு முன்பு மதுபானக்கடைகள் தனியார் வசம் இருந்தது. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தை கணக்கு போட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இனிமேல் மதுபானக்கடைகளை அரசே நடத்தும் என அறிவித்ததால் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் தனியார் கடைகள் இருந்ததோ அங்கெல்லாம் டாஸ்மாக் சார்பில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது.
அதோடு, தமிழகத்தின் பல இடங்களிலும் புதிதாக பல கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பு வரவே நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் மூடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் கோடிகள் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானமாக வருகிறது. டாஸ்மாக் மூலம் வருமானத்தை வைத்தே அரசு தரப்பில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது மதுவை ஒழிப்போம் என எல்லா கட்சியும் வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் எந்த கட்சியும் அதை செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ரூ.1734 கோடி அதிகரித்திருக்கிறது. 2022-23ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் 44,121.13 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், 2023-24 நடப்பாண்டில் 45, 855.67 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைள் இந்த நடப்பாண்டில் வந்ததால் டாஸ்மாக் வருமான் அதிகரித்திருக்கும் என கருதப்படுகிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…