கன்னட திரையுலகில் கொடி கட்டி பறந்து வந்தவர் நடிகர் தர்ஷன். அவர் தன்னுடைய காதலி பவித்ரா கவுடாவிற்கு ஆபாச செய்தி அனுப்பியதாக கூறி ரேணுகா சுவாமி என்பவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் இருக்கிறார்.
முதலில் இந்த வழக்கில் தர்ஷனுக்கு பதில் ஐவர் சரணடைந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை தொடர்ந்தது. அதன் முடிவில் கன்னடா நடிகர் தர்ஷனை அவரின் ஜிம்மில் வைத்து கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரின் காதலி பவித்ராகவுடா உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருந்தகத்தில் வேலை செய்து வந்த ரேணுகா சுவாமியை கொடூரமாக தாக்கியதாக புகைப்படங்கள் வெளியானது. அவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் கடித்த காயங்கள், ரத்த கட்டுகள் என பார்ப்பதற்கே கொடூரமாக காணப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட தர்ஷன் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
அவருக்கு சிறையில் 6106 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்துள்ள நிலையில், தர்ஷனின் ரசிகர்கள் அதை பச்சை குத்திக்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது ஒரு ஒருபுறமிருக்க தம்பதி ஒருவர் தங்களுடைய குழந்தைக்கு தர்ஷனின் கைதி கெட்டப்பை போட்டு உள்ளனர்.
கை குழந்தைக்கு நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தர்ஷனின் எண்ணை சட்டையில் குத்திவிட்டு தி பாஸ் என்ற தர்ஷனின் அடைமொழி குறிப்பிட்ட பேப்பரும் அருகில் இருக்கிறது. இந்த போட்டோ வைரலாகி வரும் நிலையில், குழந்தைக்கு கைதி கெட்டப் போடுவது தவறான முன்னுதாரணம். இந்த போட்டோவை பதிவிட்டவர்கள் மீது சைபர் கிரைம் காவல்துறை உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…