அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு உயிரிழந்து இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி சாங்கிலி மாவட்டம், பாலஸ் என்ற பகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையம் ஒன்றில் கடந்த ஒன்றாம் தேதி குழந்தைகளுக்கு சத்துணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இந்த பொட்டலத்தில் இறந்த நிலையில் சிறிய வகை பாம்பு இருப்பதை பார்த்த பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சங்கிலி மாவட்ட கலெக்டர் ராஜா விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அங்கன்வாடியில் ஆய்வு நடத்தி உணவை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருக்கும் பெற்றோர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கிடையே பாலஸ் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் விஷ்வஜித் கடாம், சட்டப்பிரிவையில் இப்பிரச்சனையை குறித்து பேசி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…