கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-க உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என்று பல பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பொதுமக்கள் பலரும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை என பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராய ஒழிப்பு சம்பவத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கையை எடுத்துவந்தது.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் இதுவரை 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தார்கள்.
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தமிழக அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்து வந்தார்கள் .விரைவில் இது தொடர்பான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி வந்தார்கள். கள்ளச்சாராயம் சாப்பிட்டு தற்போது வரை 65 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிவராமன் என்பவர் உயிரிழந்திருக்கின்றார். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…