india
நடிகைக்கு ஆபாச வீடியோ!.. கண்ட துண்டமாக வெட்டி நாய்க்கு போட்ட நடிகர் தர்ஷன்.. பரபர அப்டேட்!..
![darshan - Cinereporters Info darshan](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/darshan.jpg)
கன்னட மொழியில் அனதரு, கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா போன்ற சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் இந்த தர்ஷன். இவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான காடேரா படமும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான், திடீரெனெ நேற்று கன்னட போலிசார் இவரை ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர்.
இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கொலைக்கான பின்னணி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்ஷன் திருமணமாவனவர். ஆனால், நடிகை பவித்ரா என்பவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இருவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் பவிர்த்ராவின் செல்போன் என்ணுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்புவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது என தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இந்த தகவலை பவித்ரா தர்ஷனிடம் சொல்ல கடுப்பான அவர் கூலிப்படை மூலம் அவரை கண்ட துண்டமாக வெட்டி உடலின் பாகங்களை பல இடங்களிலும் எறிந்திருக்கிறார். ரேணுகா சுவாமியின் உடல் கடந்த 9ம் தேதி போலீசாரால் கண்டறிப்பட்டிருக்கிறது. பல சித்ரவதைகளுக்கு பின் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக மேலும் 9 பேரை கன்னட போலீசார் கைது செய்துள்ளனர். தர்ஷனிடமும், கைது செய்யப்பட்ட மற்றவர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் தர்ஷன் உள்ளிட்ட மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
india
சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!
அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.
india
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
india
மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!
ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.
விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.
இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
india
திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!
கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பமே கொடுமை செய்த காரணத்தால் ஐடி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
விஜயநகர் மாவட்டம் சுசலஹல்லி பசப்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவர் படித்து முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் கங்கமணக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்கள் .
திருமணத்தின் போது சுனில் பூஜா குடும்பத்திடம் ஏகப்பட்ட வரதட்சனை கேட்டிருந்தார். அது அனைத்தையும் அவர்கள் கொடுத்துதான் திருமணம் செய்திருந்தார்கள். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க முடியாது என்று மறுத்து இருக்கின்றார்.
இதன் காரணமாக இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டும் இல்லாமல் தாய் மற்றும் சகோதரி என அனைவரும் குடும்பமாக சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் பூஜா. இது குறித்து தனது பெற்றோரிடமும் பூஜா தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூஜா தனது அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பூஜாவின் குடும்பத்தினர் சுனில் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
india
என்ன கடிச்சா நான் சும்மா விட்ருவேனா… பாம்புக்கு ரிவெஞ் கொடுத்த நபர்… பீகாரை அதிர வைத்த சம்பவம்…!
பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே கிடையாது. பாம்பு கடித்து மனிதர்கள் பலரும் உயிரிழப்பது வழக்கம் தான். பாம்பு கடித்தவர்கள் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்திருப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பீகாரில் ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது.
பீகாரின் நபாடா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் லோகர் என்பவர் கூலித்தொழிலாக இருந்து வருகின்றார். இவர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே இருந்த குடிசையில் படித்து கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த அவர் தன்னை கடித்த பாம்பை திரும்பி கடித்தால் தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்று செய்யாது என்ற மூடநம்பிக்கையில் இருந்துள்ளார்.
உடனே அந்த பாம்பை பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதனையடுத்து சந்தோஷ் லோகர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
tech news2 days ago
வேற லெவல் லுக், சூப்பர் ஸ்பெக்ஸ் கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
-
tech news2 days ago
ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?
-
latest news21 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news19 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!