நேற்று தாக்கலான பட்ஜெட்டின் மீது எதிர்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் விமர்சனங்களை சொல்லி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் விஷயம் இல்லாத பட்ஜெட் இது என வசை பாடி வந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி, கார்கே துவங்கி தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் பட்ஜெட் குறித்த தங்களது எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது. தமிழக எம்.பி.தயாநிதி மாறன் பட்ஜெட் குறித்த பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டின் மூலம் எந்த விதமான பயனும் இல்லை என்ற நோக்கிலேயே பேசினார் தயாநிதி மாறன். தாம்பரம் – செங்கல்பட்டு உயர்மட்ட சாலைக்கு ஒப்புதல் தரப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
அதே போல ரஷ்யாவிலிருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கிய போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை இதுவரை குறைக்கவில்லை என்றார். கோயம்பத்தூரில் ரோட் ஷோ நடத்திய மோடி, அதே கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை என சுட்டிகாட்டினார். பிரதமர் மோடி வாக்களித்த மக்களுக்காக பாடுபடவில்லை, கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காகவே பாடுபட்டுவருகிறார் என தனது குற்றச்சாட்டினை அழுத்தமாகச் சொன்னார் தயாநிதி மாறன்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…