இந்திய அணியின் விக்கெட்கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் அறிமுகமானார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் தான் ஜூரெல் இந்திய ஜெர்சியில் களமிறங்கி விளையாடினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து சமீபத்தில் பேசிய துருவ் ஜூரெல், தான் எதிரணி வீரர்களால் ஸ்லெட்ஜிங் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய அணி குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்த நிலையில், களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்த போது எதிரணி வீரர்கள் தன்னை கோபமூட்டும் வகையில் பேசியதாக தெரிவித்தார்.
“அந்த நாள் இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நான் 30 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழக்காமல் இருந்தேன். மேலும் அடுத்த நாள் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு வந்தேன். பழைய பந்தில் அரைசதம் கடப்பதா அல்லது புதிய பந்து வரும் வரை நிதானமாக விளையாட வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், அவர்கள் புதிய பந்தை எடுப்பதற்குள் நான் 36 ரன்களை எடுத்திருந்தேன். அதன்பிறகு தான் ஆன்டர்சன் மீண்டும் பந்துவீச வந்தார்.”
“ஜோ ரூட் மிக ஆக்ரோஷமாக இருந்தார், மேலும் தொடர்ச்சியாக ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். அவர்கள் பிரிடிஷ் மொழியில் பேசி வந்தனர். இதனால், அவர்கள் பேசியதில் பல வார்த்தைகள் எனக்கு புரயவும் இல்லை. இவருடன் பேர்ஸ்டோவும் இணைந்து கொண்டார். ஐபிஎல்-இல் என்னுடன் விளையாடியவர் என்பதால், ஜோ ரூட் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.”
“நீங்களும் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று ஜோ ரூட்-இடம் கேட்டேன். அதற்கு அவர், தற்போது நாம் அனைவரும் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்று பதில் அளித்தார்,” என்று துருவ் ஜூரெல் தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…