சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 11 ஆயிரம் வைரத்தை வைத்து ரத்தன் டாடா உருவத்தை வடிவமைத்துள்ளார்.
பிரபல டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக கடந்த வாரம் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இவருக்கு வயது 86. இவரது உடல் கடந்த வாரம் வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தார்.
உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இருக்கும் மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் அவரின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
பிறகு அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்தன் டாடா மறைவுக்கு பல தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் மறைந்த ரத்தன் டாட்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி 11 ஆயிரம் வைரக்கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியிருக்கின்றார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…