இந்திய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 43 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்க ஆயத்தமாகிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
வங்கதேசம் அணி இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு இந்தியா வரும் வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று அசத்தியது.
பலம் வாய்ந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு இந்தியா வரும் வங்கதேசம் அணியை எளிதில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்து இருந்தனர். இருவரின் கருத்து இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருவரின் கருத்துக்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு கடினமான நேரத்தை வழங்கிவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவது மிகப்பெரிய விஷயம், வங்கதேசம் பாகிஸ்தானில் சிறப்பாகவே விளையாடினார்கள். எனினும், அவர்கள் இந்திய அணிக்கு அதிகம் தொல்லை கொடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை,” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…