கிரிக்கெட் போட்டிகளின் போது விலங்குகள் புகுவதால், போட்டி சிறிது நேரம் தடைபடுவது மிகவும் சாதாரண விஷயம் தான். பல சமயங்களில் பறவைகள், பூனை மற்றும் நாய்கள் என பல விலங்குகள் மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டியில் இடையூறு ஏற்பட்ட சம்பவங்கள் பலமுறை நடைபெற்று இருக்கின்றன.
அந்த வகையில், இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் கல்லே டைட்டன்ஸ் மற்ரும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. போட்டியின் போது பாம்பு களத்துக்குள் புகுந்தது. இதன் காரணமாக மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் அம்பயர்கள் ஒருபக்கமாக கூடினர்.
பாம்பு நுழைந்ததால், களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு வங்கதேச அணியை சீண்டியுள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..,
“நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், சமீபத்திய சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் நக்கல் செய்திருக்கிறார்.
பாபர் அசாம், ஷகிப் அல் ஹாசன், டேவிட் மில்லர் என பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் லங்கா பிரீமியர் லீக் தொடர் இலங்கையில் ஜூலை 30 ஆம் தேதி துவங்கியது. இந்த தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…