Connect with us

latest news

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.

இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

இன்னைக்கு மிஸ்ஸே ஆகாது… ஜூலை மாதம் டமால், டுமில் தான்… வெதர்மேன் சொன்ன அசத்தல் ரிப்போர்ட்!..

Published

on

நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மலை வெளுத்து வாங்கிய நிலையில் சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் அதுவும் சென்னையில் நேற்று பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடுமையான புழுக்கம் இருந்தது . அதைத் தொடர்ந்து நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசு தொடங்கி கனமழை கொட்டி தீர்த்து விட்டது. இடி மின்னலுடன் மலை வெளுத்து வாங்கியதால் வானிலை இதமான சூழலுக்கு மாறியது .

விட்டுவிட்டு பெய்த மழையால் சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையின் அளவு 10 சென்டிமீட்டர்.

அதில் நேற்று பெய்த மழையில் ஒரு மணி நேரத்திலேயே 6 cm மழை பதிவாகிவிட்டதாக கூறியிருந்தார். ஜூன் மாதம் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் தான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் இன்று மிஸ் ஆகாது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிக்களில் ஜூலை மாதம் டமால் டுமீல் என்று மழை தொடங்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போலவே நேற்று இரவு நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அது மட்டும் இல்லாமல் கும்மிடிப்பூண்டி, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம் ரோகித் டி20 சாதனையை சமன் செய்ததாக மிகவும் கிண்டலாக கூறி இருந்தார். அதிவேகமாக 50 அடித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 30 நிமிடங்களுக்குள் 50 மில்லி மீட்டர் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து விட்டது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

Continue Reading

india

வேலை நேரத்துல ரீல்ஸ்… சிக்கலில் 8 கேரள அரசு ஊழியர்கள் 8 பேர்!

Published

on

By

கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா. நகராட்சியைச் சேர்ந்த 8 ஊழியர்கள் இன்ஸ்டாவில் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடிய ரீல்ஸ் ஒன்று சமீபத்தில் வைரலானது. அலுவலக வளாகத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த ரீல்ஸ் வைரலானது, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவல்லா நகராட்சியின் செயலாளர், அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டது ஏன் என்று விளக்கம் கேட்டு ஊழியர்கள் 8 பேருஜ்க்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த நோட்டீஸுக்கு அவர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

`அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டதாகத் தெரியவந்த தகவலை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் என்னுடைய கடமையை மட்டுமே செய்திருக்கிறேன்’ என்று நகராட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், அலுவலக வேலை நேரத்தில் ரீல்ஸ் போடவில்லை என்றும் பணி இடைவெளியின்போதுதான் ரீல்ஸ் செய்ததாகவும் அந்த ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பணி எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Continue Reading

Cricket

கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி… உற்சாக வரவேற்பு…!

Published

on

கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக இந்திய திரும்ப முடியாமல் பார்படாசியில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் நேற்று இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக பார்படாசிலிருந்து இந்தியா புறப்பட்டனர் . இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லிக்கு வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தின் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

மேலும் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பி இருக்கும் இந்திய அணி வீரர்களை இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி சந்திக்க இருக்கின்றார். இதைத்தொடர்ந்து இன்று மாலை மும்பை வான்கடா மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக உலக கோப்பையுடன் வலம் வருவார்கள் என்றும், ரசிகர்கள் படை சூழ திறந்தவெளி பஸ்ஸில் டி20 உலக கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Continue Reading

india

ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..

Published

on

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.

அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.

Continue Reading

india

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..

Published

on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.

சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.

Continue Reading

Trending

Exit mobile version