விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட அனியூர் சிவா வெற்றி பெற்றிருக்கின்றார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டார்கள், மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் வாக்களித்தனர் 82.47 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருக்கின்றது,
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை ஆறு மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான பணிகள் தொடங்கியது.
காலை 7:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 20 சுற்றுகளாக வாக்கிய எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அணியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அனியூர் சிவா அபார வெற்றி பெற்று இருக்கின்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் 69 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…