மனைவி இறந்த சோகத்தில் டாக்டர் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
சேலம் மாவட்டம் வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் இனியவன் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் . சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சௌமியா தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இனியவன் வீட்டு கடன் வாங்குவதற்காக சௌமியா வேலை பார்த்து வங்கிக்கு செல்ல இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருக்கின்றது. இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்க இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் திருவேங்கடம் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடி பெயர்ந்தனர் .
இனியவன் மருத்துவ பயிற்சிக்காக ஆறு மாதங்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. இதனால் மனைவி சௌமியா சேலத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டில் சென்று இருக்கும்படி தெரிவித்து இருக்கின்றார். இதற்கு சௌமியா மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஏழாம் தேதி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு சௌமியா தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மருத்துவர் இனியவன் மருந்து இல்லாத வெறும் ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றார். இதைப் பார்த்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் தான் வீடு திரும்பியிருக்கின்றார். இன்று காலை டாக்டர் இனியவன் குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலமாக விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…