Categories: Cricketlatest news

320 பந்துகளில் 498 ரன்கள்.. மிரட்டி விட்ட மாணவர்.. யார் இந்த துரோனா தேசாய்?

18 வயதான இளம் கிரிக்கெட் வீரர் துரோனா தேசாய். பள்ளி அளவில் நடைபெற்ற திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட்டில் தனது பள்ளி அணிக்காக 498 ரன்களை விளாசியுள்ளார். செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக விளையாடிய தேசாய் ஜெ.எல். இங்லிஷ் பள்ளிக்கு எதிராக ஷிவே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தான் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவரது நேற்றைய ஆட்டம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இணைய செய்துள்ளது. 320 பந்துகளை எதிர்கொண்ட தேசாய் ஏழு சிக்சர்கள் மற்றும் 86 பவுண்டரிகளுடன் எதிரணியை திணறடித்து 498 ரன்களை விளாசியுள்ளார். இவரின் அதிரடி ஆட்டம் செயின்ட் சேவியர்ஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தது.

கிட்டத்தட்ட 500 ரன்களை அடிக்க இருந்த நேரத்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தது பற்றி பேசிய தேசாய், “நான் 500 ரன்களை நெருங்கியிருந்தேன் என்றே எனக்கு தெரியாது. ஸ்கோர்போர்டும் இல்லை, எனது அணியினரும் என்னிடம் அதுபற்றி எதுவும் கூறவில்லை. நான் எனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன், ஆனால் இத்தனை ரன்களை அடித்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்,” என்றார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த துரோனா தேசாய் தனது மாநிலத்திற்காக அண்டர் 14 அணியில் விளையாடி இருக்கிறார். இவரது சமீபத்திய ஆட்டம், குஜராத் அண்டர் 19 அணியில் இவரது பெயரை இடம்பெற செய்ய தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏழு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் தேசாய், சச்சின் டெண்டுல்கர் பேட் செய்வதை பார்த்து கிரிக்கெட்டில் ஈர்க்கப்பட்டுள்ளார்.

இளம் வயதில் தனது கிரிக்கெட் ஆர்வத்தை கண்டுபிடித்த தேசாயின் தந்தை அவருக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளார். மேலும், தேசாய் கிரிக்கெட்டில் வெற்றி பெற பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் பட்டேலிடம் தேசாய் பயிற்சி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 40 கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெயபிரகாஷ் பட்டேல் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்திய அளவில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரணாவ் தான்வாட் (1009*) மற்றும் இந்திய வீரர் பிரித்வி ஷா (546) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் துரோனா தேசாய் இடம்பெற்றுள்ளார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago