மது போதையில் போலீசாரை அசிங்கமாக திட்டிய ஒரு ஜோடியின் வீடியோவானது இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகின்றது.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி மிகத் தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள். மேலும் அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை கொடுத்ததற்கு அந்த ஜோடி போலீஸ்காரர்களை மிக அசிங்கமாக பேசிய வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் உதயநிதி ஸ்டாலினை இப்போ கூப்பிடுவேன் பாக்குறியா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லியும் அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் யார் சார் நீங்க என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி மிக தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் பேசுவீர்கள் என்றால் கைது செய்வோம் என்று போலீசார் கூறியதற்கு அதற்கு அந்த நபர் இவன் எல்லாம் அள்ளக்கை.. அரெஸ்ட் பண்ணப் போறியா..? முடிந்தால் பண்ணுடா.. யோவ் உன் ஆளை கூட்டிட்டு வா.. இன்ஸ்பெக்டரை கூட்டிக் கொண்டு வா.. நாளை காலையில் உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க என்று கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைப்பாடி இருக்கின்றார்.
மேலும் அந்த நபர் போலீஸ்காரின் போனை பிடுங்க முயற்சி செய்திருக்கின்றார். அதற்கு அந்த பெண் இவன் எல்லாம் ஒரு ஆளு இவனை போய் என்று சொல்லும் வீடியோ தான் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது. குடித்துவிட்டு குடிபோதையில் இதுபோன்று நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…
பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…
அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…
அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…