தலைக்கேறிய போதையில் மனனைவியிடம் தகராறு செய்த கணவரை காவல் துறை கைது செய்துள்ளது. மனைவி கொடுத்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் அந்த பெண்ணின் கணவர். தாக்க முயன்ற நபரை கட்டுப்படுத்திய காவல் துறையினர், அந்த நபரை கைது செய்து அவர்கள் பாணியில் விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் ஆதேஷ் நகரில் மனைவியுடன் வசித்து வருபவர் பினய் குமார். குடிப்பழக்கம் கொண்டிருந்த பினய் குமார் மது அருந்திய நிலையில் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த தனது மனைவி மகாலெட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்கு வாதம் முற்றிப்போன நிலையில் மனைவி மகாலெட்சுமியை தாக்க முற்பட்டதாக சொல்லப்பட்டது.
கணவர் ஆதேஷ் குமாரின் இந்த செயலால் கோபமடைந்த மனைவி மகாலெட்சுமி காவல் துறைக்கு போன் செய்திருக்கிறார்.
புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த போலீசார் பினய் குமாரின் அருகே சென்றிருக்கின்றனர். உச்சக்கட்ட போதையில் இருந்த பினய் குமார், காவல் துறையினருடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகி விசாரிக்க வந்த காவல் துறையினர் மூன்று பேரில் ஒருவரை பினய் குமார் தாக்கியிருக்கிறார்.
இந்த தாக்குதலால் கண் இமைப்பகுதியில் காயமடைந்த காவலருக்கு மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கப்பட்டது. இதனிடையே காவலரை தாக்கிய பினய் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார் போதையை தெளிய வைத்து, அவர்கள் பாணியில் விசாரணை நடத்தியிருக்கின்றனர். பினய்குமார் போதையில் காவல் துறையினருடன் தகராறு செய்த வீடியோ இப்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…