பட்டுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மண்ணப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். அப்பகுதியில் தட்டுவண்டி ஓட்டி குடும்பம் நடத்தி வரும் இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம்.
அப்படி வீட்டுக்கு வரும்போது பல நேரங்களில் மனைவி ரஞ்சிதாவுடன் சண்டையிடுவது வழக்கம் என்கிறார்கள். இந்தநிலையில், கடந்த 16-ம் தேதி மதியம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது, அடிக்கடி ஏன் குடித்துவிட்டு வந்து பிரச்னை செய்கிறீர்கள் என மனைவி ரஞ்சிதா, வீரக்குமாரிடம் கேட்டிருக்கிறார்கள். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் சண்டையான நிலையில், மாமியார் சந்தி இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
ஆனால், சமாதானமாகாத வீரக்குமார் மற்ற இருவரிடமும் கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த வீரக்குமார் மறைத்துவைத்திருந்த கத்தியால் மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தி ஆகியோரை சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில், படுகாயமடைந்த மாமியார் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ரஞ்சிதா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வீரக்குமாரைக் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த…
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…