வேட்டி உடுத்தியிருந்த விவசாயியை அனுமதிக்காத பெங்களூரு ஜிடி வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
பெங்களூரு மகடி ரோடு பகுதியில் ஜிடி மால் என்கிற பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் உள்ள தியேட்டர் ஒன்றில் தனது மகன் நாகராஜூடன் படம் பார்ப்பதற்காக 70 வயதான ஃபகீரப்பா என்பவர் சென்றிருக்கிறார். ஆனால், அவர் வேட்டி உடுத்தியிருந்ததைச் சுட்டிக்காட்டி, வணிக வளாக விதிமுறைகளின்படி உள்ளே அனுமதிக்க பாதுகாவலர்கள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வணிக வளாகத்துக்கு வெளியே கன்னட மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேட்டி மற்றும் லுங்கி அணிந்தபடி வணிக வளாகத்துக்குள் சென்றும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
வணிக வளாக சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கர்நாடக சட்டப்பேரவையில் எழுப்பின. இந்த விவாகரம் தொடர்பாக பேரவையில் பேசிய அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும் அந்த வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட உத்தரவிட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…