latest news
இனி இது தேவையில்ல… மின் இணைப்பு ஈசியா வாங்கலாம்… அமலுக்கு வந்த புதிய விதிமுறை…!
இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பை பெறலாம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
பொதுவாக தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் வரைபடத்தில் உள்ள அளவில் தான் கட்டிடம் இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் மட்டுமே இந்த சான்றிதழ்களை பெற முடியும்.
அதே வேளையில் இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பலரும் புகார் கொடுத்து வந்தனர். எனவே தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை. அதன்படி 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.
750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடு 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அளவில் இருக்கும் வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் சரி கட்டிடப் பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது”.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு புறம் வரவேற்பு பெற்றிருந்தாலும் இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இப்படி பணி நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்று கூறினால் பலரும் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டுவார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள்.
latest news
விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வில் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், விரைவில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும், ஒரிரு வாரங்களில் கூடும் மத்திய அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், ஏழாவது ஊதியக்குழுவின்படி டிஏ, டிஆற் அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி செய்தி வந்து சேரும்.
ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வந்துவிடும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2024-க்கான டிஏ மூன்று முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை 53 முதல் 54 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை மாதம் துவங்கி டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சேர்த்தே வழங்கப்படும்.
Cricket
ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ். டோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள் மட்டும் அன்-கேப்டு வீரர்களாக கருதப்படுவார்கள் என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது. எம்.எஸ். டோனி ரசிகர்களுக்காக அடுத்த சீசனில் விளையாட ஆர்வம் காட்டிய நிலையில், ஐபிஎல் விதிகள் இந்த விஷயத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது.
மேலும், அணியில் தக்க வைக்கும் போது, பெரிய தொகையில் ரீடெயின் செய்யப்பட்டு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த டோனி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த விலையில் ரீடெயின் செய்ய முடியும் எனில், அடுத்த சீசனில் எம்எஸ் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் பிசிசிஐ நடத்திய ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.
அந்த அறிவிப்பில், இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அன்-கேப்டு வீரராக மாற்றப்படலாம். எனினும், இவ்வாறு மாற்றப்படுவதற்கு அந்த வீரர் கடைசி ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கக்கூடாது. மேலும், பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இடம்பெற்றிருக்கக் கூடாது. இந்த விதியின் படி சென்னை அணி எவ்வித தயக்கமும் இன்றி எம்.எஸ். டோனியை அடுத்த சீசனில் விளையாட வைக்க அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
Cricket
INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. மழை குறுக்கிட்டதால், போட்டியில் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றிரவு மழை பெய்தது, இரண்டாம் நாள் முழுக்க மழை தொடர்ந்த காரணத்தால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இந்தியாவில் இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக பலமுறை மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருநாள் ஆட்டம் முழுக்க பாதிக்கப்பட்டது கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதல் முறை ஆகும்.
கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டது. அந்த சீரிசில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
அதன்பிறகு, கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மேலும், போட்டியின் மூன்றாம் நாளான இன்றும் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் இன்றைய ஆட்டமும் முழுமையாக கைவிடப்படும் சூழல் நிலவுகிறது.
போட்டியின் கடைசி இரண்டு நாள் ஆட்டத்தின் போது வானம் தெளிவாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உள்ளது. இதே தொடரில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
Cricket
INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான டி20 தொடர் அக்டோபர் 6, அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும் மூன்றாவது போட்டி ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் அகர்வால்.
முன்னதாக இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரில் வைத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தனது பயணத்தை தொடங்கினார்.
Cricket
ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இதுப்பற்றிய தகவல் ஐபிஎல் அணிகளுக்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. புதிய விதிமுறைகளின் படி ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் ஒப்பந்த மதிப்பு தவிர்த்து, அவர்கள் குறிப்பிட்ட அணியில் இருப்பதற்கு ஒவ்வொரு அணியும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும்.
இதுப்பற்றிய அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு அணியும் போட்டி கட்டணமாக ரூ. 12.60 கோடியை செலுத்த வேண்டும். இந்தத் தொகை அணிகள் ஏலத்திற்காக செலவிடும் தொகையில் சேராது. ரூ. 12.60 கோடியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு போட்டிக்கு ரூ. 90 லட்சம் சேரும். 14 போட்டிகளுக்கு ரூ. 90 லட்சம் சேர்க்கும் போது மொத்த தொகை ரூ. 12.60 கோடியாக இருக்கும்.
முதற்கட்ட போட்டி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையிலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ இடையே மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வீரர்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வைத்து அணிகள் வீரர்களை நிதி ரீதியில் ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
-
Cricket2 days ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
Cricket20 hours ago
இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..
-
Cricket21 hours ago
INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
-
latest news2 days ago
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…
-
Cricket2 days ago
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
-
Finance2 days ago
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
-
latest news18 hours ago
தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…
-
Cricket20 hours ago
மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…