Categories: latest newstamilnadu

இனி இது தேவையில்ல… மின் இணைப்பு ஈசியா வாங்கலாம்… அமலுக்கு வந்த புதிய விதிமுறை…!

இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பை பெறலாம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் வரைபடத்தில் உள்ள அளவில் தான் கட்டிடம் இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் மட்டுமே இந்த சான்றிதழ்களை பெற முடியும்.

அதே வேளையில் இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பலரும் புகார் கொடுத்து வந்தனர். எனவே தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை. அதன்படி 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.

750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடு 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அளவில் இருக்கும் வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் சரி கட்டிடப் பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது”.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு புறம் வரவேற்பு பெற்றிருந்தாலும் இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இப்படி பணி நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்று கூறினால் பலரும் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டுவார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள்.

Ramya Sri

Recent Posts

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

56 mins ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

1 hour ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

2 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

3 hours ago

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…

3 hours ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

4 hours ago