தமிழகத்தில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு என அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: தமிழகத்தில் 4.38% அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஜீரோ முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
401 முதல் 500 யூனிட் வரை உள்ள பயன்பாட்டிற்கு 6 ரூபாய் 15 காசுகளிலிருந்து, 6 ரூபாய் 45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 500 முதல் 600 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 8 ரூபாய் 15 காசுகளிலிருந்து 8 ரூபாய் 55 காசுகளாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. மேலும் 600 முதல் 800 வரை உள்ள பயன்பாட்டிற்கு 9 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 9 ரூபாய் 65 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு இனி 11 காசுகள் வசூல் செய்யப்படும் என்று மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த மின்கட்டண உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போதும் ஒரு கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்து இருக்கின்றது.
இரு மாதங்களுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை நிலை கட்டணம் செலுத்துவதிலிருந்து வீட்டு மின் நுகர்வோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத்தலங்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்து இருக்கின்றது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…