manjolai: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து பிபிடிசி நிறுவனம் நான்காவது நோட்டீஸை வழங்கியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய நான்கு தேயிலைத் தோட்டங்களை பிபிடிசி நிறுவனம் 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்தத் தேயிலைத் தோட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
பிபிடிசி நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028ம் ஆண்டோடு முடிவடைகிறது. இதனால், ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் வகையில், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் வகையிலான 3 நோட்டீஸ்களை அந்த நிறுவனம் ஏற்கனவே வழங்கியிருந்தது.
இந்தநிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை காலி செய்து கொடுக்கும்படியிலான நான்காவது நோட்டீஸையும் பிபிடிசி நிறுவனம் வழங்கியிருக்கிறது. அந்த நோட்டீஸில் விருப்ப ஓய்வு மனுவை சமர்ப்பிக்க ஜூன் 15-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த நாளில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படும் நாளாகவும் கணக்கில் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், விருப்ப மனுவை சமர்ப்பிக்கிற நாளில் 25% கருணைத் தொகையும், அந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள்ளாக, அதாவது ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள்ளாக குடியிருப்புகள் மற்றும் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த உபகரணங்கள் ஆகியவற்றைத் திரும்ப அளிக்கும் நிலையில் மீதமிருக்கும் 75% கருணைத் தொகையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தங்களை விரைவாக தேயிலைத் தோட்டங்களில் இருந்து வெளியேற்ற பிபிடிசி நிறுவனம் முயற்சிப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…