இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 20) டிரினிடாட்-இன் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இது இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் 100 ஆவது போட்டி ஆகும். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்தியாவுக்காக களமிறங்கும் 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும்.
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள், 274 ஒருநாள் போட்டிகள் மற்றும் 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து, விராட் கோலி இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை சேர்த்திருக்கிறார். விராட் கோலி தனது 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதை ஒட்டி, முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
“இந்த விளையாட்டுக்காக விராட் கோலியின் அர்ப்பணிப்பு வெளிப்படையாக தெரிவதோடு, அவர் யார் என்பதை விளக்குகிறது. தனது வாழ்க்கை முழுக்க கிரிக்கெட் மட்டும் தான் என்று துறவியை போன்று விராட் கோலி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த காரணத்திற்காகவே, விராட் கோலி இந்த அற்புதமான விளையாட்டுக்கே விளம்பர தூதராக கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்-க்கு அவர் செய்திருக்கும் அனைத்திற்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருக்கிறார்.
அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஆறாவது இடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சச்சின் டென்டுல்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம், 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார்.
தனது 500 ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கும் விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். கையில் டம்பெல்-உடன் ஸ்குவாட் செய்யும் காட்சிகள் அடங்கி வீடியோவுக்கு, எனது உடல் வலிமை மற்றும் மொபிலிட்டிக்காக நான் செய்யும் உடற்பயிற்சி என்று தலைப்பிட்டு இருந்தார். விராட் கோலியின் இந்த வீடியோ, அவர் பதிவிடும் மற்ற பதிவுகளை போன்றே அதிவேகமாக வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…